புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

செம்பருத்தி மற்றும் செம்பருத்திப் பூவின் பயன்கள்


செம்பருத்தி மற்றும் செம்பருத்திப் பூவின் பயன்கள்


 Semparuthi poo benefits tamil

Semparuthi poo benefits tamil

1)வேறுபெயர்கள்- செம்பரத்தை, ஷுப்ளவர், சீன
ஹைபிஸ்கஸ்.

2)தாவரப்பெயர்- HIBISCUS ROSASINENSIS.

3)குடும்பம்- MALVACEAE.

4)வளரும் தன்மை- இதனுடைய தாயகம் சீனா நாடு. இது எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது. இது வீடுகளிலும், தோட்டங்களிலும் அழகுக்காக  செடியாக வளர்க்கப்படுகிறது. இது ஐந்து இதழ்களைக் கொண்டு நடுவில் மகரந்தத்தாள் கொண்டு இருக்கும். செம்பருத்தியில் பல வகைகள் உள்ளன மற்றும் பல நிறங்களும் உள்ளன. பெரும்பாலும் இந்தியாவில் நிலப்பகுதிகளில் அடுக்கு செம்பருத்தி காணலாம்இதனுடைய பூவில் துவர்ப்பு சுவையும் வளவளப்பு தன்மையும்  கொண்டு தங்கச்சத்து உள்ளது. இதனுடைய முதிர்ந்த குச்சியை அரையடி வெட்டி நட்டு வைத்தால் புதிய செடி வளரும்.

5)வகைகள் -கோ 1, திலகம் சிகப்பு நிறப்பூக்கள்,
கோ 2, புன்னகை, மஞ்சள் நிறப்பூக்கள் , அடி
பாகத்தில் சிகப்பு நிறங்கொண்ட மஞ்சள் நிறப்
பூக்கள்.

6)பயன்தரும் பாகங்கள் - பூக்கள், இலைகள், பட்டை
மற்றும் வேர்கள்.

7)பயன்கள் - செம்பருத்திப்பூ  கூந்தலுக்கு நல்லது இதனைக் கொண்டு மூலிகை ஷாம்பு தயாரிக்கிறார்கள்இது கருப்பை கோளாறுகள், இதய நோய், ரத்த அழுத்த நோய் போன்ற நோய்களை குணப்படுத்தும். செம்பருத்தி பூ  பூஜைக்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது

அழலை, இரத்தபித்தம், தாகம்,பேதி, வயிற்றுக்
கடுப்பு, விந்துவை நீற்றும், மேகம், விசுசி வேட்டை
போம். தேகவாரேக்கியம், விழியொளியும் உண்டாம்.

செம்பையிலைக்கட்டி, ஜந்நி, தினவு, துடைவாழை,
நீர்ரேற்றம், பிளவை, பீநாசங்கள், புண்புரை, மேகம்,
வாதகபம், விப்புருதி, விரணம், வீக்கம், வெடித்த
புண், புரைகளும் போம்.




செம்பருத்திப்பூவை நல்லெண்ணையில் காச்சி தடவ முடி வளரும்.

செம்பரத்தம் பூ புண், ஈரல்
வீக்கம், நீர்கட்டு  ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

தஙகச்சத்து இப்பூவில் உள்ளதால்தாதுவிருத்திக்கு
மிகவும் சிறந்ததாகும்தினமும்  10 பூவை மென்று
தின்று பால்அருந்தினால் 40நாளில் தாது
விருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டி
படும், ஆண்மை எழுச்சி பெறும்
  
 செம்பருத்திப்பூவை உலர்த்திப் பொடிசெய்து சம எடை மருதம்
பட்டை த்தூள் கலந்து பாலில் காலை மாலை பருக
இதயபலவீனம் தீரும்.

உலர்த்திய பூ  சூரணத்துடன்  மற்றும் முருங்கைப்பூ அல்லது விதை
உலர்த்திய தூளும் சேர்த்து ச்சாப்பிட்டு வந்தால்
ஆண்மை குறைபாடு நீங்கும்,இன்பம்
நீடிக்கும்.-----



  Semparuthi poo benefits in tamil, uses ,nanmaigal , payangal ,etharku payanpadukirathu,  ulla sathukal,  engu kidaikkum,  vilai/price/rate,