புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

பூ மருத்துவம் ||Mooligai pookal

பூ மருத்துவம்  ||Mooligai pookal

Mooligai pookal

மல்லிகை, முல்லை, ரோஜா, கனகாம்பரம் என, வாசனைக்காக தலையில் சூடிக்கொள்ளும் மலர்களில், பல வகையான மருத்துவ குணம் மறைந்திருக்கிறது. அறிந்து கொண்டால் பல நோய்களுக்கு விடை கிடைக்கும்.
முல்லைப் பூவின் சாறு பிழிந்து மூன்று துளி மூக்கில் விட்டால் தலைவலி தீரும். முல்லைப் பூவின் சாற்றினை இரண்டு அல்லது நான்கு துளி வீதம் கண்ணில் விட்டு வந்தால் கண் பார்வை குறைவு குணமாகும். முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.
Mooligai pookalஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது. கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும். ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும்.

ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு, 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்க்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும். உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயண இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.
மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும். இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர் இப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும். இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். ரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

குங்குமப்பூவை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு, 5 முதல், 10 இதழ்களை இரவு பசும்பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது. வேப்பம்பூவை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி, இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக்குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

Mooligai pookal,Mooligai pookal health benefits and uses in tamil,mooligai poo sedi,poo sedigal


·         ஆடா தொடை மருத்துவக் குணங்கள் aada thodai benefits...

·         உயிர் அணுக்களை சாலாமிசிரி கஞ்சி salam misri kanji benefits tamil

·         மூட்டுவலியை போக்கும் கருப்பு உப்பு black salt benefits tamil

·         கருங்காலி மரத்தின் மருத்துவ பயன்கள் karungali maram benefits tamil

·         கற்பகமூலிகை இலையின் அற்புத மருத்துவப் பயன்கள்|| mo...