kuppaimeni benefits in tamil
குப்பைமேனி பயன்கள்
இது ஒரு மாந்திரீக
மூலிகையாகும். இது மேனியில் உள்ள குப்பை போன்ற சரும வியாதிகளை நீக்குவது குப்பைமேனி
என்று சித்தர்களால் அழைக்கப்பட்டது.. இந்தச் செடியின்
அருகே பூனை நெருங்காது எனவே இது பூனை விரட்டி என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இதனை மார் ஜாலமோகினி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இதனுடைய அறிவியல் தாவரப் பெயர்கள் ACALYPHA INDICA அகாலிபா இண்டிகா. இது EUPHORBIACEAE தாவரகுடும்பத்தைச் சேர்ந்தது.
இது சாலை ஓரங்களிலும், வாய்க்கால் வரப்புகளிலும், மற்றும் தரிசு நிலங்களிலும் இந்தியாவில் தானாக வளரக்கூடிய ஒரு சிறிய செடி. இதை நாம் நட்டு வைக்க வேண்டிய அவசியம் இல்லை இது தானாக தன்னுடைய விதைகள் மூலம் பரவி வளரக்கூடியது. இதனுடைய இலைகள் முக்கோண வடிவமாகவும் அதன் அடியில் மஞ்சள் நிறப் புள்ளிகள் உடையதாகவும் காய்கள் மிளகு போன்ற வடிவத்திலும் இருக்கும். இது வசீகரிக்கும் தன்மை கொண்ட மூலிகை எனவே இதை மாந்திரீகத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இதில் மிகவும் விஷத்தன்மை கொண்ட வேதி பொருட்களான குனான், ஸ்டீரால்ஸ் மற்றும், சைனோஜெனிக் க்ளைக்கோஸைடு உடையது. எனவே இதை மருத்துவ ஆலோசனையின்படி உபயோகப்படுத்துவது நல்லது.
இது சித்த மருத்துவத்தில் இதனுடைய அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை கொண்டதாக உள்ளது.
தோல் வியாதிக்கு மருந்து:
இது அனைத்து தோல் வியாதிகளுக்கும் மருந்தாக
பயன்படுகிறது. இதன் இலைகளை பறித்து அதனுடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து
அந்த கலவையை உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் தோல் வியாதிகள் குணமாகும்.
மேலும் சொறி சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
ஆறாத புண்:
ஆறாத புண்ணு
இருக்கு இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிவர புண்ணானது விரைவில் ஆறும் என்று
கூறுகிறார்கள்.
இதனுடைய
வேர் சூரணம் ஆனதுமலச்சிக்கலுக்கு மருந்தாக பயன்படுகிறது.
மூல நோய்க்கு
:
இது அனைத்து
வகையான மூலத்தையும் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.. பூத்த குப்பைமேனியை வேருடன் பிடுங்கி
நிழலிலுலர்த்தி பின் அதனை சூரணமாக செய்து கொள்ள வேண்டும். அந்த
சூரணத்துடன் 5 கிராம் அளவிற்கு பசு நெய் சேர்த்து காலை மாலை இருவேளை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமடையும்
இது நெஞ்சில்
கட்டியுள்ள கோழையை அகற்றும் தன்மை கொண்டது ஆதலால் இது இருமலைக்கட்டுப் படுத்தும்.
மேலும் இது விஷக்கடி மற்றும் வாத நோய்கள்
ஆத்மா குடற்புழு தலைவலி மூட்டுவலி போன்றவைகளும் மருந்தாக பயன்படுகிறது.
படுக்கைப் புண்
. படுக்கைப்
புண் உள்ளவர்கள் இதனுடைய இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்டிவர படுக்கைப் புண்கள்
ஆறும்
வயிறு சுத்தமாகும்
குப்பைமேனி வேரை 50 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன்
200 மில்லி லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும்
அந்த நீரை குடித்து வர வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள்
அனைத்து புழுக்களும் பூச்சிகளும் வெளியேறி வயிறு சுத்தமாகும்
தீராத தலைவலி
தீராத தலைவலி உள்ளவர்கள் இதனுடைய இலைப் பொடியை மூக்கில் நுகர்ந்தால் மூக்கில் உள்ள நீர் வடிந்து தலைவலி உடனே
தீரும். இதனை சித்தர்கள் நசியமிடுதல் என்று சொல்வார்கள். மேலும் இது சித்தபிரமை, வெறிநாய்க்கடி
போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
You can get details of kuppaimeni benefits in tamil, kuppaimeni uses in tamil, kuppaimeni nanmaigal in tamil, kuppaimeni payangal in tamil, kuppaimeni etharku payanpadukirathu, kuppaimeni ulla sathukal, kuppaimeni engu kidaikkum, kuppaimeni vilai/price/rate, kuppaimeni eppadi irukkum