புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்ய வேண்டும் Chitra pournami

 

 Chitra pournami

சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்ய வேண்டும்.

சித்ரா பௌர்ணமி அன்று சிவாலயங்களில்.,பூஜைகளும் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படும். இந்த நாளில் சித்திரகுப்தனை வழிபடுவது நல்லது.பொதுவாக இது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி என்பதால் இதை சித்ரா பௌர்ணமி என்று அழைக்கின்றனர்.மனிதர்களாக பிறந்த அனைவரும் செய்யும் பாவ புண்ணிய கணக்குகளை சித்திரகுப்தன் எழுதி வைத்துக் கொள்வார் என்று ஐதீகம் மக்களிடையே உள்ளது.சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் சித்திரை பௌர்ணமி அன்று சித்திர குப்தனை யும் ,அம்பிகையை வழிபடுவது சிறந்தது என்று கூறுகிறார்கள்.இது மற்ற பௌர்ணமியை காட்டிலும் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்த சித்ரா பவுர்ணமி திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.

சித்திரா பௌர்ணமி நீடித்த ஆயுள் மற்றும் ஆரோக்கியம் தரும் நாளாகும்,நம்மை எது கிடைக்கும் சக்தியை முழுமையாக பெற இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதுமானது . தர்ப்பை புல் மட்டும் சித்தரத்தை ஆகும்.சித்ரா பௌர்ணமி அன்று வீட்டை முதலில் நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு எப்பொழுதும் போல் கடவுளை வழிபட்டுவிட்டு தர்ப்பை புல் மற்றும் சித்தரத்தையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெற வேண்டுமென்ற மனமுருகி வழிபட வேண்டும். இந்த தர்ப்பைப் புல்லை ஒரு தாயத்து போல் மடித்து சித்தரத்தையை மற்றும் தர்ப்பை புல் சேர்த்து ஒரு மஞ்சள் நூலில் கட்டி கொள்ள வேண்டும். பிறகு குல தெய்வ வழிபாடுகளை முடித்து விட்டு இந்தக் கயிறை நம் கழுத்தில் பெளர்ணமி முடியும் வரை கட்டிக் கொள்ளலாம்.வார செய்யும் போது மிகப்பெரிய நற்பலன்களைப் பெறலாம் என்றும் ஆன்மிகவாதிகள் தெரிவிக்கிறார்கள்.


Tags:

Chitra Pournami Sitra Chithirai Sithirai சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்ய வேண்டும்




Post a Comment

0 Comments