புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

Kamatchi amman vilakku

 காமாட்சி அம்மன் விளக்கின் மகிமை  பற்றி பார்ப்போம்!


மனித வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் வந்து போகின்றன . இவர்களது வாழ்க்கையில் நேற்றுவரை இஷ்ட தெய்வமாக இருந்த ஒன்று நாளை வேறொரு தெய்வம் ஆக இருக்கலாம். ஆனால் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்தே போற்றப்படுகின்ற விளக்கு நல்ல விளக்கு கைவிளக்கு என்று கூறப்படும் காமாட்சி விளக்கு.


காமாட்சி விளக்கு ஒவ்வொருவர் வீட்டிலும் நீங்காத இடம் பிடித்து இருக்கிறது. இது மங்களச் சின்னமாகப் போற்றப்படுகிறது தனது வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்கு செல்லும் பொழுது அவர்கள் கையில் இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று காமாட்சி அம்மன் விளக்கு ஆகும்.


விளக்குகளில் மனிதர்களின் மனதில் இடம்பிடித்து உள்ள முக்கியமான விளக்கு காமாட்சி அம்மன் விளக்காகும். இது பொதுவாக அனைவரது வீட்டில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான விளக்காகும்.பூஜைக்கு முன் பூவும் பொட்டும் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் சுபிட்சம் லாபம் அதிகரிக்கும்.


இன்றும் பல குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.இன்னும் சிலர் தம் முன்னோர்கள் பயன்படுத்திய காமாட்சியம்மன் விளக்குகளை பத்திரமாக பொக்கிஷமாக வைத்து பாதுகாத்து வருகின்றனர்.


திருமணமாகி புதுமனை புகும் போதும் மணமக்கள் மணப்பந்தலில் சுற்றி வலம் வரும்போதும் எல்லா இருள்களையும் போக்கும்படி அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால் பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் விளக்கை ஆகும்.


மேலும் திருமணமாகி புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்பொழுது படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வருவார்கள்.


வீட்டில் வறுமை ஏற்படாமலிருக்க கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் காமாட்சி விளக்கை பூவும் பொட்டும் வைத்து  மங்களத்துடன் தீபம் ஏற்றி தினமும் வழிபட்டு வர வேண்டும்.


காமாட்சி அம்மன் அனைத்து தெய்வங்களுக்கும் சமம் என்பதால் நாம் அனைத்து தெய்வங்களின் அருளை பெற வேண்டுமென்றால் காமாட்சி விளக்கை தினமும் ஏற்றி வழிபட்டு வர வேண்டும் அதன் மூலம் அனைத்து தேவர்களின் அருளையும் பெறலாம்.


குலதெய்வத்தின் ஆசி பெற்று குடும்பம் தழைத்து வளர தினமும் வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபட்டு வருதல் வேண்டும்.


எனவே நான் இல்லத்திலும் உள்ளத்திலும் உள்ள எல்லா எண்களையும் நீக்கி இறைவனின் அருள் ஒளியை பெறவும் சந்தோஷத்துடன் வாழவும் காமாட்சி அம்மன் விளக்கு நமக்கு அனைத்து செல்வங்களையும் கொடுக்கட்டும்.

 



Post a Comment

0 Comments