புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள்! kadan theera pariharam

 கடன் பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள்!

kadan theera pariharam

இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத நிகழ்வாக இருக்கின்றது .பலர் வாங்கிய கடனை அதை அக்கறையுடன் திருப்பி செலுத்தி விடுகின்றனர் .ஆனால் பலரால் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் திணறுகின்றனர் .கடன் வாங்குவதற்கு நேரம் காலம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது அதேபோல் கடனை திருப்பி அடைப்பதற்கும் இவை இரண்டும் மிகவும் அவசியம் .

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள்! kadan theera pariharam



கடன் பிரச்சினைகள் விரைவில் தீர என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.


தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லக்ஷ்மி நரசிம்மர் படத்தின் முன்னின்று அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ருண விமோசன ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்கள் அடைபடும் என்பது ஆன்மீக கருத்து.


வளர்பிறை நாள் இன்று சித்திரை நட்சத்திரம் வரும் நாளில் காமாட்சி அம்மனை பட்டுப்புடவைகள் சாற்றி அலங்கரித்து வழிபட்டு வந்தால் நிச்சயம் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு மனநிறைவான வாழ்க்கை உருவாகும்.


தினமும் நாம் காலையில் எழுந்தவுடன் தங்க நாணயம் அல்லது ரூபாய் நோட்டுக்களை பார்த்து வந்தால் செல்வம் வளம் வீட்டில் அதிகரிக்கும்.


ஒரு வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்த பின்பு உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வீட்டின் மகாலட்சுமிக்கு பூஜை செய்துவர வேண்டும்.

இவ்வாறு பூஜை செய்து வருவதால் படத்திற்கு குறைவே இருக்காது.






முருகப் பெருமானை கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து தரிசித்து வந்தால் கடன்கள் தீர வழி வகைகள் பிறக்கும்.


ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் விரதம் இருந்து நாம் வீட்டின் அருகில் உள்ள முருகப் பெருமான் சன்னிதியில் சென்று மாலை வேளைகளில் 12 முறை பிரதட்சணம் செய்து நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால் கடன் தொல்லையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.






கடன் வாங்கும் போது செய்யக்கூடாத விஷயங்கள்


 நாம் கடன் வாங்கும் பொழுது செவ்வாய்க்கிழமைகளில் கடன் வாங்கவே கூடாது ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் நாம் கடனை அடைக்கலாம்.


நம் வாழ்க்கையில் ராகு கேது போன்ற பாம்பு கிரகங்கள் குரு சேர்ந்து நிற்கும் பொழுது புதிய கடன்களை வாங்கவோ அல்லது அடைக்க முயற்சி செய்தல் கூடாது.



ஏழரை சனி அஷ்டம சனி அர்தாஷ்டம சனி ஆகவே நமக்கு நடைபெறும் பொழுது நாம் கடன்கள் வாங்க முயற்சி செய்யக்கூடாது.


சந்திரன் பல மற்ற நாட்களில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கவே கூடாது.


Post a Comment

0 Comments